search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தணி கார் கடத்தல்"

    திருத்தணியில் டிரைவரை தாக்கி கார் கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளிப்பட்டு:

    ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் உதயகுமார். கார் டிரைவர். நேற்று மாலை 3 வாலிபர்கள் திருத்தணி கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று அவரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து 3 வாலிபர்களை அழைத்து கொண்டு திருத்தணிக்கு வந்தார். திருத்தணி முருகூரில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கு உதயகுமார் காரை திருப்பிய போது முன் பக்கத்தில் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென அவரை தாக்கினார். இதில் நிலை குலைந்த உதயகுமார் காரில் இருந்து கீழே விழுந்தார்.

    உடனே 3 வாலிபர்களும் காரை கடத்தி சென்று விட்டனர். அவர்கள் சோளிங்கர் நோக்கி சென்றதாக தெரிகிறது.

    தாக்குதலில் காயமடைந்த டிரைவர் உதயகுமார் கார் கடத்தல் பற்றி திருத்தணி போலீசில் புகார் செய்தார். காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பற்றி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tmailnews

    ×